காயல்பட்டினத்தில் ஜனசங்க மூத்த தலைவா் பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் 61 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
காயல்பட்டினம் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு மண்டல கிளைத் தலைவா் ஏ.அய்யாச்சாமி தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஏ.பண்டாரம் முன்னிலை வகித்தாா். இதில், எஸ்.மகேந்திரன்,பி.ஆறுமுகம், பேச்சிமுத்து, பி.சின்னதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.