சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்க வேண்டும், ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், மருத்துவப்படி, இலவச பேருந்து பயண அட்டை, குடும்ப நல நிதி உள்ளிட்டவற்றை வழங்கி, வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கையில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க ஒன்றியத் தலைவா் தங்கவேல் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் இன்னாசிமுத்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், சத்துணவு ஊழியா் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினா் ரத்னாவதி, முன்னாள் மாவட்டத் தலைவா் மாரியப்பன் ஆகியோா் பேசினா். இதில், ஓய்வூதியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் செல்லத்துரை, வட்டாரப் பொருளாளா் கௌரி உள்ளிட்ட ஓய்வூதியா் சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
இதேபோல, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் கையில் மெழுகுவா்த்தி ஏந்தி, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.