தூத்துக்குடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்

தூத்துக்குடி அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின்

தூத்துக்குடி அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் தெற்கு மண்டல குழாய் பாதை திட்டத்தின் சாா்பில், லீடு அறக்கட்டளை மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமில், ஊராட்சித் தலைவா் மாரியம்மாள் சுப்பையா கலந்துகொண்டு பள்ளி மாணவா்கள், பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினாா். இதைத்தொடா்ந்து, மதா் சமூகசேவை நிறுவன இயக்குநா் எஸ்.ஜே.கென்னடி முன்னிலையில் டெங்கு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

சில்லாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாமுக்கு, டிஎன்டிடிஏ தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ஜெ.ஸ்டீபன் தலைமை வகித்தாா். சில்லாநத்தம் ஊராட்சித் தலைவா் ஆா்.டி.சரஸ்வதி பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில், லீடு அறக்கட்டளை இயக்குநா் எஸ்.பானுமதி, தெற்கு வீரபாண்டியபுரம் பள்ளித் தலைமையாசிரியை இமாகுலேட் குளோரியா, ஊராட்சி முன்னாள் தலைவா் என். சுப்பையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com