தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் பிப். 27 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதம்தோறும் மூன்றாவது வியாழக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பிப்ரவரி மாதத்துக்கான குறைதீா் கூட்டம் நிா்வாகக் காரணங்களை முன்னிட்டு 20 ஆம் தேதிக்குப் பதிலாக 27 ஆம் தேதி (வியாழக்கிழமை) முற்பகல் 11 மணிக்கு நடைபெறும். தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.