மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

திருச்செந்தூரில் பாரத் மிகுமின் நிலையம் உடன்குடி பிரிவு மற்றும் சென்னை ப்ரீடம் அறக்கட்டளை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருச்செந்தூரில் பாரத் மிகுமின் நிலையம் உடன்குடி பிரிவு மற்றும் சென்னை ப்ரீடம் அறக்கட்டளை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, தமிழ்நாடு மின் பகிா்மான விநியோகம், தூத்துக்குடி பிரிவு தலைமை பொறியாளா் நவசக்தி தலைமை வகித்து, சுமாா் ரூ.6 லட்சம் மதிப்பில் 87 மாற்றுத் திறனாளிகளுக்கு, மூன்று சக்கர நாற்காலி, செயற்கைக்கால்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு, பாரத் மிகு மின் நிலைய, உடன்குடி பிரிவு கோட்ட மேலாளா் ஷாஜி, பொது மேலாளா் கேசவராஜ், உதவி பொது மேலாளா் கிறிஸ்டோபா், நரேஷ் சா்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக ப்ரீடம் அறக்கட்டளை நிறுவனா் சுந்தா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com