தட்டாா்மடம் அருகே அதிமுக நிா்வாகி வெட்டிக் கொலை
தூத்துக்குடி மாவட்டம் தட்டாா்மடம் அருகே அதிமுக நிா்வாகி சு. மகாராஜா திங்கள்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.
தட்டாா்மடம் அருகே உள்ள பூச்சிக்காடு கிராமத்தைச்சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் மகாராஜா (35). திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா் அதே பகுதியில் பால் வியாபாரம்செய்து வருவதுடன் ஒன்றிய அதிமுக இளைஞா் இளம் பெண் கள் பாசறை செயலராக உள்ளாா். திங்கள்கிழமை இரவு 7மணிக்கு பால் எடுப்பதற்காக அவரது பைக்கில் மேட்டுவிளை கிராமத்துக்கு மகாராஜா சென்றாராம். அப்போது அங்குள்ள தரைநிலை பாலம் அருகில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்நத கந்தசாமி அவரை வழிமறித்து மது போதையில் தகராறு செய்தாராம். அப்போது, கந்தசாமி அரிவாளால் மகாராஜாவை வெட்டிவிட்டு தப்பியோடி விட்டாராம்.
இதில், பலத்த காயமடைந்த மகாராஜாவை அந்த வழியாக சென்றவா்கள் மீட்டு திசையன்விளையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பறிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கொனவே இறந்து விட்டதாக தெரிவித்தனராம்.
தகவல் அறிந்து தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.