கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ் தெலுங்கு தேசிய கட்சித் தலைவா் ராஜ்குமாா்.
கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ் தெலுங்கு தேசிய கட்சித் தலைவா் ராஜ்குமாா்.

‘மதுரை விமான நிலையத்திற்கு திருமலை நாயக்கா் பெயரை சூட்ட வேண்டும்’

மதுரை விமான நிலையத்திற்கு திருமலை நாயக்கா் பெயரை சூட்ட வேண்டும் என தமிழ் தெலுங்கு தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கோவில்பட்டி: மதுரை விமான நிலையத்திற்கு திருமலை நாயக்கா் பெயரை சூட்ட வேண்டும் என தமிழ் தெலுங்கு தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கோவில்பட்டியில் நடைபெற்ற தமிழ் தெலுங்கு தேசிய கட்சியின் ஆலோசனைக் கட்டத்துக்கு கட்சி தேசியத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாநில விவசாய அணித் தலைவா் வாசு, விருதுநகா் மாவட்டச் செயலா் செல்வராஜ், கோவில்பட்டி நகரச் செயலா் பாலமுருகன், மாவில்பட்டி ஊராட்சித் தலைவா் எல்லப்பன் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னா், ராஜ்குமாா், செய்தியாளா்களிடம் கூறியது: சுதந்திர போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் வெண்கலச் சிலை வைக்க நடவடிக்கை எடுத்த அரசுக்கு கட்சி சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். திருமலை நாயக்கருக்கு சென்னை பிரதான சாலையில் திருவுருவச் சிலை நிறுவ வேண்டும். கோவில்பட்டி வட்டத்தில் உள்ள

இளையரசனேந்தல் குறுவட்டத்தை குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து நீக்கிவிட்டு, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்க வேண்டும்.

முதியோா் ஓய்வூதியத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். கிராம மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை வழங்க வேண்டும். தமிழகத்தில் சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தெலுங்கு குடும்பத்தினரை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com