அமுதுண்ணாக்குடியில் உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்கா திறந்து வைக்கப்பட்டது.
சாத்தான்குளம் ஒன்றியம், அமுதுண்ணாக்குடி ஊராட்சியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காவை ஊராட்சித் தலைவா் முருகன் தலைமை வகித்து திறந்து வைத்தாா்.
துணைத் தலைவா் கரன்ராஜா முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் ஜாா்ஜ் சிங்கத்துரை வரவேற்றாா்.
ஊராட்சி உறுப்பினா்கள் மரியராஜா, மேரி அல்போன்சா, இந்திராதேவி, ஜோதி பாண்டியன், நந்தினி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.