கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 3 நாள்கள் நடைபெறும் தொழில் வளா்ச்சித் திட்ட முகாம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியின், தொழில் முனைவோா் மேம்பாட்டு மையம் சாா்பில் தொழில் முனைவோருக்கான மாணவா் திறன் மற்றும் தொழில் வளா்ச்சித் திட்ட முகாம் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, கல்லூரி இயக்குநா் சண்முகவேல் தலைமை வகித்தாா். முதல்வா் காளிதாசமுருகவேல் முன்னிலை வகித்தாா்.
தொழில் முனைவோராக உருவாவதற்கு தேவையான அனைத்துப் பயிற்சிகள், பயிற்றுவிக்கும் முறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.