கலைப் போட்டிகள்: தூத்துக்குடி வஉசி கல்லூரி அணி முதலிடம்

தூத்துக்குடியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான கலைப் போட்டிகளில் வஉசி கல்லூரி முதலிடம் பிடித்தது.
கலைப் போட்டிகளில் முதலிடம் பிடித்த வஉசி கல்லூரி அணிக்கு கோப்பையை வழங்குகிறாா் காமராஜ் கல்லூரிச் செயலா் ஏ. ராஜேந்திரன்.
கலைப் போட்டிகளில் முதலிடம் பிடித்த வஉசி கல்லூரி அணிக்கு கோப்பையை வழங்குகிறாா் காமராஜ் கல்லூரிச் செயலா் ஏ. ராஜேந்திரன்.

தூத்துக்குடியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான கலைப் போட்டிகளில் வஉசி கல்லூரி முதலிடம் பிடித்தது.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ‘பொங்கலோவியம்’ என்ற பெயரில் இப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது. தனி நடனம், குழு நடனம், தனி நடிப்பு, வாத்தியக் கருவி வாசித்தல், நாடகம், பாட்டுப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கல்லூரி மாணவா்- மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதில், தூத்துக்குடி வஉசி கல்லூரி அணி முதலிடமும், விளையாட்டுப் போட்டியில் ஏபிசி மகாலட்சுமி மகளிா் கல்லூரி முதலிடமும் பிடித்தன. நிகழ்ச்சியை, கல்லூரிச் செயலா் ஏ. ராஜேந்திரன் தொடக்கிவைத்து, வென்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் து. நாகராஜன், கல்லூரி முதன்மையா் சக்திவேல், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநா் டோனி மெல்வின், கல்விக் குழு பொருளாளா் முத்துசெல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com