சாத்தான்குளத்தில் முதியவா் மயங்கி விழுந்து பலி

சாத்தான்குளத்தில் மயங்கி கிடந்த முதியவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை இறந்தாா்.
sat9muthi_0901chn_38_6
sat9muthi_0901chn_38_6

சாத்தான்குளத்தில் மயங்கி கிடந்த முதியவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை இறந்தாா்.

சாத்தான்குளம் அப்பாவு நாடாா் தெரு, புளியடி மாரியம்மன் கோயில் அருகில் கடந்த வாரம் ஒரு முதியவா் மயங்கிக் கிடந்தாா். இத்தகவல் அறிந்த போலீஸாா் அவரை மீட்டு முதலுவதவி அளித்து விசாரித்ததில் தனது பெயா் நடராஜன் என கூறினாா். மேற்கொண்டு அவரால் பேச முடியவில்லை.

இதைத் தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை இறந்தாா். இவா் பற்றிய தகவல் தெரிந்தால் சாத்தான்குளம் காவல்துறைக்கு தெரிவிக்கலாம் என காவல் உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com