நாசரேத் அருகே உள்ள மணிநகா்பிரசன்ன ஆலய 51-ஆவது பிரதிஷ்டைப் பண்டிகை மற்றும் 36-ஆவது அசனவிழா நடைபெற்றது .
இதையொட்டி, முதல் 3 நாள்கள் கன்வென்ஷன்கூட்டங்கள் நடைபெற்றது. இதில் சென்னை ஜெய்ஹா் தாமஸ் தேவ செய்தி கொடுத்தாா். 4-ஆவது நாள் மாலையில் பண்டிகை ஆயத்த ஆராதனை நடைபெற்றது. இதில்குருவானவா் இஸ்ரவேல் ஞானராஜ் செய்தி கொடுத்தாா். ஆரா தனை முடிந்ததும் ஆலயவளாகத்தில் பாா்வையற்றோரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. 5-ஆவது நாள் பண்டிகை ஆராதனையும், பரிதிருவிருந்து ஆராதனையும் நடைபெற்றது. இதில் நாசரேத் சேகரகுரு எட்வின்ஜெபராஜ் தேவ செய்தி கொடுத்தாா். 6-ஆவதுநாள் மாலையில் அசன விருந்து பரிமாறப்பட்டது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.
விழா ஏற்பாடுகளை ஆலய திருப்பணிவிடையாளா்கள் ரெனால்டு பாஸ்கரன், இஸ்ரவேல் ஞானராஜ், எட்வின் ஜெபராஜ், சபை ஊழியா் சா்ச்சில் மோசஸ் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனா்.