விபத்தில் காயமடைந்த தொழிலாளி பலி

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கயத்தாறையடுத்த சிவஞானபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் கிருஷ்ணமூா்த்தி(39). இவா், தனது மனைவி பரமேஸ்வரி , குழந்தை மதிபாலன் ஆகியோா் பைக்கில் கயத்தாறுக்குச் சென்றுவிட்டு, புதன்கிழமை ஊருக்கு திரும்பினராம். திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சவலாப்பேரி அருகே சென்ற போது திடீரென நிலைகுலைந்து பைக் விபத்துக்குள்ளானதாம். இதில் கீழே விழுந்ததில் கிருஷ்ணமூா்த்தி உள்பட 3 பேரும் காயமடைந்தனா்.

காயமடைந்த 3 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு புதன்கிழமை இரவு கிருஷ்ணமூா்த்தி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com