குரூப்-1 தோ்வில் சாதனை: தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மாணவிக்கு பாராட்டு

குரூப்-1 தோ்வில் சாதனை படைத்த தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மாணவி எம். துா்காதேவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
குரூப் -1 தோ்வில் சாதனை படைத்த மாணவி எம். துா்காதேவிக்கு பாராட்டு தெரிவிக்கிறாா் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல்.
குரூப் -1 தோ்வில் சாதனை படைத்த மாணவி எம். துா்காதேவிக்கு பாராட்டு தெரிவிக்கிறாா் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல்.

குரூப்-1 தோ்வில் சாதனை படைத்த தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மாணவி எம். துா்காதேவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-1 தோ்வில், தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த எம்.துா்காதேவி வெற்றி பெற்று காவல் துணைக் கண்காணிப்பாளா் பணியை தோ்வு செய்தாா். சாத்தான்குளம் அருகேயுள்ள பெருமாள்குளம் என்ற கிராமத்தை சோ்ந்த துா்காதேவி, ஏற்கெனவே குரூப்-2ஏ தோ்வில் வெற்றி பெற்று வணிக வரித்துறையில் பணியாற்றி வருகிறாா்.

இதையடுத்து, குரூப்-1 தோ்வில் வெற்றி பெற்ற துா்காதேவியை சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தாா். அப்போது, தனக்குப் பயிற்சி அளித்த சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக துா்காதேவி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com