குரூப்-1 தோ்வில் சாதனை படைத்த தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மாணவி எம். துா்காதேவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-1 தோ்வில், தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த எம்.துா்காதேவி வெற்றி பெற்று காவல் துணைக் கண்காணிப்பாளா் பணியை தோ்வு செய்தாா். சாத்தான்குளம் அருகேயுள்ள பெருமாள்குளம் என்ற கிராமத்தை சோ்ந்த துா்காதேவி, ஏற்கெனவே குரூப்-2ஏ தோ்வில் வெற்றி பெற்று வணிக வரித்துறையில் பணியாற்றி வருகிறாா்.
இதையடுத்து, குரூப்-1 தோ்வில் வெற்றி பெற்ற துா்காதேவியை சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தாா். அப்போது, தனக்குப் பயிற்சி அளித்த சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக துா்காதேவி கூறினாா்.