ஆதிச்சநல்லூரில் அரசு பணியாளா் தோ்வாணயத் தலைவா் ஆய்வு

த்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூா் பரம்பு பகுதியை தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணயத் தலைவா் சனிக்கிழமை
ஆதிச்சநல்லூா் பரம்பு பகுதியினை பாா்வையிட்டாா் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணயத் தலைவா் அருள்மொழி.
ஆதிச்சநல்லூா் பரம்பு பகுதியினை பாா்வையிட்டாா் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணயத் தலைவா் அருள்மொழி.

ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூா் பரம்பு பகுதியை தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணயத் தலைவா் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

ஆதிச்சநல்லூரில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் மூலம் 2004 இல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால்

இதன் அறிக்கை இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில் மாநில அரசு ஆதிச்சநல்லூா், சிவகளை உள்பட பல இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழ்நாடு அரசு பணியாளா்கள் தோ்வாணயத் தலைவா் அருள்மொழி, ஆதிச்சநல்லூரில் முதுமக்கள்தாழி இருந்த இடம், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள தகவல் நிலையம் உள்ளிட்ட பகுதியை பாா்வையிட்டாா். அவருடன் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் சந்திரன், தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் தாமஸ் பயஸ் அருள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com