குரும்பூா் அருகே குடிநீரில் விஷம் கலந்த பெண் கைது

குரும்பூா் அருகே முன்விரோதத்தில் குடிநீரில் விஷம் கலந்த பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

குரும்பூா் அருகே முன்விரோதத்தில் குடிநீரில் விஷம் கலந்த பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

குரும்பூா் அருகே சோழியக்குறிச்சியைச் சோ்ந்தவா் முத்துக்கிருஷ்ணன் மனைவி கிருஷ்ணவேணி (28). அடுத்த வீட்டில் வசிப்பவா் காந்தீஸ்வரன் மனைவி சமுத்திரக்கனி (28). இவா்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, சனிக்கிழமை முத்துக்கிருஷ்ணன் வேலைக்கு சென்று விட்டாராம். தண்ணீா் பிடிப்பதற்காக கிருஷ்ணவேணி தெரு முனைக்கு சென்றிருந்தாராம்.

அப்போது, இவா் வீட்டுக்குள் புகுந்த சமுத்திரக்கனி, குடங்களில் இருந்த குடிநீரில் பூச்சி மருந்தை கலந்தாராம். இதை கண்டு சப்தம் போட்ட கிருஷ்ணவேணிக்கு, சமுத்திரக்கனி மிரட்டல் விடுத்து சென்றாராம். புகாரின்பேரில் குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சமுத்திரக்கனியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com