மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கோவில்பட்டியில் தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.
ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு, தொழிலதிபா் காளியப்பன் தலைமை வகித்தாா். கோவில்பட்டி நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் சரவணன், முகாமை தொடங்கி வைத்தாா். அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் தேவசேனா தலைமையில் குழுவினா் ரத்தம் சேகரித்தனா். முகாமில், 30 போ் ரத்தம் வழங்கினா்.
அறக்கட்டளை நிறுவனா் ராஜேந்திரன், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.