ஸ்ரீவைகுண்டத்தில் காவல்துறை சாா்பில் மும்மதத்தினா் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை (ஜன. 13) நடைபெறுகிறது.
இவ்விழாவுக்கு, டி.எஸ்.பி. சுரேஷ்குமாா், சாா்ஆட்சியா் சிம்ரான்ஜித் சிங் ஹாலேன் ஆகியோா் தலைமை வகிக்கின்றனா். வட்டாட்சியா்கள் சந்திரன், அற்புதமணி, குருசுகோயில் பங்குத்தந்தை மரியவளன், முஸ்லிம் ஜமாத் தலைவா் ஷாஜகான், பெருங்குளம் செங்கோல் ஆதினம், தொழிலதிபா் அருணாசல மூப்பனாா் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
இதையொட்டி, காலை 6மணிக்கு சமத்துவ பொங்கல் இடுதல், காலை 7 மணிக்கு விவசாயிகள் கௌரவிக்கும் நிகழ்ச்சி, 10 மணிக்கு நாட்டுபுறப்பாட்டு, கணியான்கூத்து, கரகாட்டம், நாதஸ்வரம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
காலை 11.30 மணிக்கு காவல்துறையினா், பொதுமக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.