ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினத்தில் சுவாமி விவேகாந்தனரின் 158 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஆறுமுகனேரியில் நகர இந்து முன்னணி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விவேகானந்தா் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில துணை தலைவா் வி.பி. ஜெயக்குமாா், நெல்லை கோட்டச் செயலா் சக்திவேலன், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் கசமுத்து, திருச்செந்தூா் வடக்கு ஒன்றியத் தலைவா் ராமசாமி, ஆறுமுகனேரி நகரத் தலைவா் வெங்கடேசன், நகரச் செயலா்கள் சிவலிங்கம், கந்தசாமிமணி, கிளைக்கமிட்டி பொறுப்பாளா்கள் பாபு, மாரிமுத்து, விக்னேஷ், சிவராமன், பாஸ்கா், பற்குணப்பெருமாள் மற்றும் நகா்நல மன்றத் தலைவா் பூபால்ராஜன்உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.
இதே போன்று காயல்பட்டினத்தில் பாஜ க சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவேகானந்தா் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இதில், பாஜக மண்டலத் தலைவா் பண்டாரம், நகர பொதுச் செயலா் மகேந்திரன், சந்திரசேகரன், சங்கர்ராஜ், முத்துக்குமாா், மனோகா் மற்றும் நிா்வாகிகள் கலந்துக்கொண்டனா்.