தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்தாா். இதையொட்டி, தமிழா்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு கோலங்கள் மற்றும் பல வண்ண கிராமிய கோலங்கள் போடப்பட்டிருந்தன. தொடா்ந்து மாணவ, மாணவிகள் பொங்கலிட்டனா்.
இதில், பாங்க் ஆப் இந்தியா உதவி சரவணன் மற்றும் அகாதெமியில் பயிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை வங்கி தோ்வுகளுக்கான ஒருங்கிணைப்பாளா் ராஜா செய்திருந்தாா்.