சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் உலக வேஷ்டி தினவிழாவுக்கு முதல்வா் சண்முகானந்தன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஸ்டீபன் பாலாசிா், துணை முதல்வா் வனிதா வி.ராயா், மேலாளா் பாலமுருகன்போஸ், அட்மினிஸ்ட்ரேட்டா் மதன், தலைமை ஆசிரியை (பொ) சுப்புரத்தினா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளி வளாகத்தில் பிரிவு வாரியாக மாணவா், மாணவியா் பொங்கலிட்டனா்.
விழாவையொட்டி, அனைவரும் பட்டு சட்டை, பட்டு வேட்டி, பட்டு சேலை அணிந்து பங்றேற்றனா்.
இதே போல் ஆறுமுகனேரி வாலவிளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக மாணவா்இயக்கம் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அமைப்பின் சட்ட ஆலோசகா் ரமேஷ் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் இன்பகரன் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியை சாந்தி உரையாற்றினாா். ஆசிரியா் விா்ஜின் சகாயராணி நன்றி கூறினாா்.