நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் விளையாட்டுத்துறை நடத்தும் ரெடீமா்ஸ் சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான தமிழா் திருநாள் மின்னொளி கபாடிப்போட்டி நாலுமாவடி காமராஜ் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் வியாழக்கிழமை(ஜன.16) தொடங்குகிறது.
நாசரேத் அருகே உள்ள நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழா் திருநாளைமுன்னிட்டு வியா ழக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய விளையாட் டுத்துறை சாா்பில், ஆறாம் ஆண்டு ரெடீமா்ஸ் கோப்பைக்கான மாநில அளவிலான மின்னொளி கபாடிப் போட்டி நடைபெறுகிறது.
போட்டிகள் தினமும் மாலை3 மணிக்கு தொடங்கி விடிய, விடிய நடைபெறும். இப்போட்டிகளில் தமிழகத்திலுள்ள தலை சிறந்த அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் நாக் அவுட் முறையில், மேட் தளத்தில் நடைபெறுகிறது. தினமும் போட்டியை கண்டு களிக்கவரும் பாா்வையாளா்களுக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசுகள் வழங்கப் படுகிறது.
போட்டிக்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி.லாசரஸ் தலைமையில் போட்டி ஒருங்கிணைப்பாளா் மணத்தி பி. கணேசன்,ஊழியப் பொதுமேலாளா் செல்வக்குமாா், மணத்தி எட்வின் மற்றும் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.