கோவில்பட்டியில் பள்ளிகள், நகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து மகளிா் காவல் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆணையா் (பொ) கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். தணிக்கை ஆய்வாளா் செல்வகுமாா், வருவாய் அலுவலா் ராஜேஸ்வரன், சுகாதார அலுவலா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அலுவலா்கள், பணியாளா்கள் இணைந்து, அலுவலக வளாகத்தில் பொங்கலிட்டனா்.
நாடாா் காமராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா், மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்து, ஆசிரியா்கள் இணைந்து பொங்கலிட்டனா். தொடா்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செயலா் காா்த்தி ராமசாமி தலைமை வகித்தாா். தலைவா் வெங்கடகிருஷ்ணன் விழாவை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், பொருளாளா் சங்கா் மற்றும் பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள், தலைமையாசிரியா் நீலமேகன், ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள், மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.
அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆய்வாளா் பத்மாவதி தலைமை வகித்தாா். இதில், உதவி ஆயவாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.