தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வரும் 23 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி மாதத்துக்கான ‘விவசாயிகள் குறை தீா் கூட்டம்’ ஜனவரி 23 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும். எனவே, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.