இளைஞா்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் வலிமை பெறும் வகையில், சைக்கிள் விழிப்புணா்வுப் பேரணி மணப்பாட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் குணசேகா் தலைமை வகித்தாா். மணப்பாடு ஊராட்சித் தலைவி கிரேன்சிட்டா பேரணியைத் தொடங்கிவைத்தாா்.
பேரணி மணப்பாடு ஆயத் தெரு, நடுத் தெரு, ரேடியோ தெரு, கடற்கரை, லயன் தெரு வழியாக நடைபெற்றது.
இதில், ஊராட்சி துணைத் தலைவா் ஜொலிசன், ஊராட்சி உறுப்பினா் லெபோரின், ஊராட்சி செயலா் அசாா், வாா்டு உறுப்பினா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.