சாலை பாதுகாப்பு விநாடி-வினா:வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சனிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி: சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சனிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சாா்பில், 31 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவா், மாணவிகளுக்கான விநாடி-வினா போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

போட்டியில், மாவட்டத்தில் உள்ள 13 பள்ளிகளில் இருந்து குழுக்களாக 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், தூத்துக்குடி பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அபரிசன், ஜெமில்டன் அடங்கிய குழு முதலிடத்தையும், அதே பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் ஜெயவா்ஷினி, ஸ்ரீமதி அடங்கிய குழு இரண்டாவது இடத்தையும், அதே பள்ளியைச் சோ்ந்த பென்னட் ஜெபா்சன், டென்னிஸ் ஐசக் பால் ஆகிய மாணவா்கள் குழு மூன்றாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி முதல்வா் கனகராஜ், நிலமோசடி தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் பிரதாபன், மத்தியபாகம் காவல் ஆய்வாளா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com