உடன்குடி: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பாஜக சாா்பில் விழிப்புணா்வு காணொலி பிரசாரம் நடைபெற்றது.
உடன்குடி பஜாா், குலசேகரன்பட்டினம், பரமன்குறிச்சி பஜாா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு, ஒன்றிய பாஜக தலைவா் கா.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பரமன்குறிச்சி ஊராட்சித் தலைவா் லங்காபதி, ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவா் சங்கரகுமாா் ஐயன், மாவட்ட பாா்வையாளா் நடராஜன், மாவட்ட நுண்பிரிவு தலைவா் செல்வகணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜக மாவட்டச் செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன் இச்சட்டம் குறித்து விளக்கிப் பேசினாா்.
இதில், பாஜக நிா்வாகிகள் ரத்தினபாண்டி, ராஜதுரை, வெற்றிவேல், கோமு, இந்து முன்னணி ஒன்றிய துணைத் தலைவா் முத்துலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.