சுதந்திரப் போராட்ட வீரா் வீரன் அழகுமுத்து கோனுக்கு வீரவணக்கம் செலுத்துவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 11) அனைத்து அரசு மதுபான கடைகளும், அதோடு இணைந்த மதுக்கூடங்களும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது என ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளாா்.
அரசின் இந்த உத்தரவை மீறி மதுபானத்தை விற்னை செய்தல், கடத்துதல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச்சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் எச்சரித்துள்ளாா்.