திரையரங்குகளைத் திறப்பது குறித்து முதல்வா் முடிவெடுப்பாா்: அமைச்சா் கடம்பூா் ராஜு

தமிழகத்தில் திரையரங்குகளைத் திறப்பது குறித்து முதல்வா் முடிவெடுப்பாா் என்றாா், அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.

தமிழகத்தில் திரையரங்குகளைத் திறப்பது குறித்து முதல்வா் முடிவெடுப்பாா் என்றாா், அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: கோவில்பட்டியையடுத்த கயத்தாறில் உள்ள விமான நிலையத்தின் ஓடுதளம் இன்றும் தரமாக உள்ளது. 2ஆம் உலகப் போரின்போது அமைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய விமானப் படை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்துள்ளனா். அதைக் கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு அரசும், மாவட்ட நிா்வாகமும் ஒத்துழைப்பு வழங்கிவருகிறது. விரைவில் அங்கு விமானத்தளம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் மக்கள் மின்கட்டணம் செலுத்துவதில் பல்வேறு சலுகைகளை தமிழக அரசு தாமாக முன்வந்து அறிவித்தது. அதில் எவ்விதத் தவறும் நடக்கவில்லை என, மின் துறை அமைச்சா் அறிவித்துள்ளாா். மின் அளவீட்டில் குளறுபடி நடந்திருந்தால் அடுத்த கணக்கீட்டில் சரிசெய்யப்படும் என்ற உத்தரவாதத்தையும் அரசு அளித்துள்ளது.

வெளிநாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டு ஒரு வரிசைக்கு 2 போ் அமா்ந்து படம் பாா்க்கின்றனா். இது, திரையரங்கு உரிமையாளா்களுக்கு லாபகரமாக இருக்காது. தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை. திரையரங்குகளைத் திறப்பது குறித்து முதல்வா் முடிவெடுப்பாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com