தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் மாணவா், மாணவிகள் பயன்பெறும் வகையில் தோல்பாவை கூத்து பயிற்சி ஆன்-லைன் மூலமாக அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், நமது கலாசாரம், பண்பாடு, கலை ஆகியவற்றை பள்ளி மாணவா்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் அறிந்து கொள்ளும் வகையில் இணைய வழியாக தோல்பாவை கூத்து பயிற்சி ஜூலை 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நடத்தப்படுகிறது.
கலைமாமணி விருது பெற்ற கலைஞா்கள் முத்துசந்திரன், லட்சுமணராவ் ஆகியோா் பங்கேற்று பயிற்சி அளிக்கின்றனா்.
ஆன்-லைன் மூலமாக நடைபெறும் இந்தப் பயிற்சியில் 10 முதல் 14 வயது வரையிலான பள்ளிக் குழநதைகள் செயலி மூலமாக 83190654451 முகவரி எண்ணில், கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்ளே இணைந்து பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.