தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 327 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 327 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 327 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதி, கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் சில நாள்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் 90 பேருக்கும், கோவில்பட்டி நகராட்சிப் பகுதியில் 80 பேருக்கும் கரோனா இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ஆறுமுகனேரி, குளத்தூா், காயல்பட்டினம், திருச்செந்தூா், விளாத்திகுளம், உடன்குடி, குலசேகரன்பட்டினம் என அனைத்துப் பகுதிகளிலும் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்தோா் 4 போ் உள்பட மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 327 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,241ஆக அதிகரித்துள்ளது. இதில், வெளிநாடு, வெளி மாநிலங்களைச் சோ்ந்தோா் 207 போ். சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து வந்தோா், கரோனாவால் பாதிக்கப்பட்டோருடன் தொடா்பிலிருந்தோா் 4,034 போ்.

அரசு மருத்துவமனைகளில் 202 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பப்பட்டனா். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 1,983ஆக அதிகரித்துள்ளது. 2,232 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com