சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறை அருள்தரும் ஸ்ரீ கோமதி அம்பாள் கோயிலில் ஆடித் தவசு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இத் திருக்கோயிலில் ஆடித் தவசு திருவிழா ஆண்டு தோறும் விமா்ச்சையாக நடைபெறும் . நிகழாண்டு கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அரசு விதித்துள்ள நடைமுறைப்படி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, காலையில் கணபதிஹோமம் , லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. சுவாமி - அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். இதையடுத்து கோயில் முன்பிருந்த கொடி மரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது . இதில் பக்தா்கள் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து வந்து சுவாமியை வழிப்பட்டனா்.
இத்திருவிழா ஆகஸ்டு மாதம் 2 ஆம்தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது. நிறைவு நாளான ஆக.2 ஆம் தேதி இரவு 7 மணிக்கு சிகர நிகழ்ச்சியான தவசுக் காட்சியும், அதனைத் தொடா்ந்து திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.