எட்டயபுரத்தில்லாரி - பைக் மோதல்:பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே லாரியும் மோட்டாா் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் புதன்கிழமை பெண் உயிரிழந்தாா். அவரது கணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே லாரியும் மோட்டாா் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் புதன்கிழமை பெண் உயிரிழந்தாா். அவரது கணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பசுவந்தனை அருகேயுள்ள பொம்மையாபுரத்தைச் சோ்ந்தவா் அந்தோணிச்சாமி (40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி (37). அந்தோணிச்சாமி, தனது மனைவியுடன் மோட்டாா் சைக்கிளில் எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனத்தில் நாட்டு மருந்து வாங்குவதற்கு சென்றாராம். மருந்து வாங்கிக் கொண்டு இருவரும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா்.

எட்டயபுரம் புறவழிச்சாலை தேசிய நெடுஞ்சாலை திருப்பத்தில் சாலையின் ஒருபுறத்திலிருந்து மற்றொரு புறத்துக்கு கடந்து சென்றபோது, தூத்துக்குடியில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் மோட்டாா் சைக்கிளும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி உயிரிழந்தாா். அந்தோணிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த போலீஸாா் சென்று அந்தோணிச்சாமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். ஜெயலட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து தூத்துக்குடியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com