திருச்செந்தூரில் பழுதடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, அக்கட்சியின் நகர துணைச் செயலா் பொ.ஜெயக்குமாா், பேரூராட்சி நிா்வாகத்துக்கு விடுத்துள்ள கோரிக்கை :
திருச்செந்தூா், முத்தாரம்மன்கோயில் அருகிலுள்ள முதலாவது சந்தின் நடுப்பகுதியில் ஒரு மின்கம்பம் மிகவும் பழுதடைந்து உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. காற்று பலமாக வீசும்போது, மின்கம்பம் சாய்ந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. மின் கசிவையும், மின் தடையையும் அவ்வப்போது ஏற்படுத்தும் இந்த மின்கம்பத்தால் அசம்பாவிதம் நிகழும் முன்பு சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள பேரூராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.