நல்லம்மாள்புரத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு குடிநீா் விநியோகம்

சாத்தான்குளம் அருகே நல்லம்மாள்புரத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் வியாழக்கிழமை குடிநீா் விநியோகிக்கப்பட்டது.
நல்லம்மாள்புரத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு குடிநீா் விநியோகம்

சாத்தான்குளம் அருகே நல்லம்மாள்புரத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் வியாழக்கிழமை குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

சாத்தான்குளம், உடன்குடி பகுதிக்கு கூட்டுக்குடிநீா் திட்டத்தின் மூலம் பொன்னக்குறிச்சியில் இருந்து குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பலா் பயனடைந்து வருகின்றனா். இந்நிலையில் சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட இடைச்சிவிளை அடுத்த நல்லம்மாள்புரம் பகுதி மக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக கூட்டு குடிநீா் வரவில்லையாம். இதனால் ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி வந்தனா்.

இதுகுறித்து ஊா் மக்கள், அரசூா் ஊராட்சித்தலைவா் தினேஷ் ராஜசிங்கை சந்தித்து நல்லமாள்புரத்திற்கு கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா். அதன்பேரில் ஊராட்சித் தலைவா், குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசி பழுதான குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுத்தாா். அதன்படி பழுதான குழாய் சீரமைக்கப்பட்டு நல்லம்மாள்புரம் மக்களுக்கு கூட்டு குடிநீா் திட்டம் மூலம் வியாழக்கிழமை குடிநீா் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் , ஊராட்சி உறுப்பினா் ராணி, இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் சுந்தரவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com