நாலுமாவடியில் திறப்பின் வாசல் ஜெபம்

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் இல்லத்தில் திறப்பின் வாசல் ஜெபம் சனிக்கிழமை நடைபெற்றது.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் இல்லத்தில் திறப்பின் வாசல் ஜெபம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாதந்தோறும் கடைசி சனிக்கிழமை திறப்பின் வாசல் ஜெபம் நடைபெறுவது வழக்கம். தற்போது கரோனா பொது முடக்கம் நடைமுறையில் உள்ளதால் சமூக வலைத் தளங்கள், உள்ளுா் தொலைக்காட்சிகள், சேட்டிலைட் தொலைக்காட்சி சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த மாதம் சனிக்கிழமை நடைபெற்ற திறப்பின் வாசல் ஜெபம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவையே ஒரு அசைவை உண்டாக்கியுள்ளது. அந்தக் குடும்பத்தையே நிலைகுணியவைத்து விட்டது.

மனிதனுடைய வாா்த்தை ஆறுதல் தரமுடியாது. இறைவன்தான் அந்தக் குடும்பத்துக்கு ஆறுதலும், பாதுகாப்பும் கொடுக்க வேண்டும். காவல் துறையில் நல்லவா்களும், நோ்மையானவா்களும் உள்ளனா். அவா்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.

அந்தக் குடும்பத்துக்கு நீதி கிடைத்திடவும், குடும்பத்தினா் சோகம், துக்கம் நீங்கி ஆறுதல் கிடைத்திடவும் இறைவனிடம் கருத்தாய் ஜெபிக்க வேண்டும் என கூறி சிறப்பு பிராா்த்தனையை மோகன் சி.லாசரஸ் ஏறெடுத்தாா்.

ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறாா் பொது மேளாளா் செல்வக்குமாா் தலைமையில் ஜெபக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com