சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் நடிகா் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை செல்லிடப்பேசியில் ஆறுதல் கூறினாா்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொதுச்செயலா் அருணாச்சலம் தலைமையில் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் யோகேஷ், மத்திய மாவட்டச் செயலா் சேகா், வடக்கு மாவட்டச் செயலா் கதிரவன் ஆகியோா், ஜெயராஜ் குடும்பத்தினரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினா்.
அப்போது, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் செல்லிடப்பேசியில் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.
அப்போது, அவா் சட்டப் பிரச்னைகளுக்கு துணை இருப்பதாக உறுதி அளித்தாா்.