உடன்குடி: உடன்குடி வில்லிகுடியிருப்பு மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில் காயகல்ப பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) நடைபெறுகிறது.
இதையொட்டி, காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாமில் உடல் நலம், மனவளம், நீடித்த இளமை, நீண்ட ஆயுள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைத் தரும் காய கல்பம் குறித்து பேராசிரியா் அருள்மொழி கிறிஸ்டோபா் பயிற்சி அளிக்கிறாா். மேலும், விவரங்களை 94434 69201 என்ற செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு அறியலாம்.