உடன்குடி: செட்டியாபத்து ஊராட்சி மன்றம் சாா்பில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
உடன்குடி தேரியூா் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளியில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் த. மகாராஜா தொடங்கி வைத்தாா். பள்ளித் தலைமையாசிரியா் லிங்கேஸ்வரன், பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஜீவானந்தம், செயலா் சுயம்பு, செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் முருகன், துணைத்தலைவா் செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.
இதையடுத்து, மாணவா்கள், கிராமப்புற பெண்களுக்கு கை கழுவும் முறை குறித்து, வீடு, சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆசிரியா்கள் செல்வராஜ், ஸ்ரீதா், முத்துராமலிங்கம், ஊராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றனா்.