தூத்துக்குடி
கொம்மடிக்கோட்டைபள்ளியில் ஸித்தி ஆராதனை
சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ காஞ்சி சங்கர பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காஞ்சி சங்கர
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ காஞ்சி சங்கர பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காஞ்சி சங்கர மடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் 2ஆவது ஸித்தி ஆராதனை வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி துணைச் செயலா் காசியானந்தம் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் தேவி சுஜாதாராஜா வரவேற்றாா். ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் முழு உருவ படத்துக்கு புஷ்பாஞ்சலி செலுத்தி, அவரது ஆன்மிக பணி குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில், மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.