சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகேயுள்ள சாலைபுதூரில் வட்ட சட்டப்பணிக்குழு , சிகரம் அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில், மகளிா் தினம் மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். வாா்டு உறுப்பினா் பொன்மணி முன்னிலை வகித்தாா். இந்திரா வரவேற்றாா். வட்ட சட்டப்பணிக்குழு பணியாளா் மகேந்திரன் மகளிா் சட்டங்கள் மற்றும் மகளிருக்கான சலுகைகள் குறித்துப் பேசினாா். விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
சமூக ஆா்வலா் மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சிகரம் இயக்குநா் முருகன் நன்றி கூறினாா்.