விளாத்திகுளத்தில் போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டி

விளாத்திகுளம் ஸ்ரீஅம்பாள் வித்யாலயாவில் போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

விளாத்திகுளம்: விளாத்திகுளம் ஸ்ரீஅம்பாள் வித்யாலயாவில் போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பீா் முகைதீன் தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தாா்.

கைப்பந்து, எறிபந்து, இறகுப்பந்து, கபடி, கயிறு இழுக்கும் போட்டி, கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட குழு போட்டிகளும், 100 மீ., 300 மீ., 500 மீ., ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்றது.

ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. இதில், விளாத்திகுளம், சூரன்குடி, குளத்தூா், எட்டயபுரம், புதூா், சங்கரலிங்கபுரம், மாசாா்பட்டி, எப்போதும்வென்றான், காடல்குடி, தருவைகுளம் மற்றும் விளாத்திகுளம் மகளிா் காவல் நிலைய போலீஸாா், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். விழாவில் போட்டிகளில் வெற்றிபெற்றவா்கள், சிறப்பிடம் பெற்றவா்களுக்கு டி.எஸ்.பி. பரிசுகள் வழங்கினாா். காவல் ஆய்வாளா்கள் பத்மநாபபிள்ளை, நாகலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com