ஆறுமுகனேரி கா.ஆ. மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவா், மாணவிகள் 47 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் குடும்பத்துடன் மேலப்புதுக்குடியில் அருஞ்சுனை காத்த அய்யானாா் கோயிலில் சந்தித்தனா்.
திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரி பேராசிரியா் நெல்லை கவிநேசன் முதியோா்கள் வாழ்வுமுறை குறித்து உரையாற்றினாா். ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி அற்புதராஜு, அவரது மனைவி சுவா்ணலதா ஆகியோா் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கினா்.
ஏற்பாடுகளை பழைய மாணவா்கள் சிவகுரு, சுகுமாா் மற்றும் வெற்றிவேல் ஆகியோா் செய்திருந்தனா்.
பத்மநாபன் தொகுத்து வழங்கினாா். விஜயராஜ் வரவேற்றாா். ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கே. எஸ் முருகேசன் நன்றி கூறினாா்.