கயத்தாறு அருகே காா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை காா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை காா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தருமபுரியைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் தினேஷ்குமாா் (24). இவரும் இவரது உறவினா்கள் 5 பேரும் திருப்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு திங்கள்கிழமை இரவு காரில் புறப்பட்டனா். திருப்பூா் பல்லடம் சாலை தென்னம்பாளையத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் திருநீலகண்டன் என்ற முகேஷ் (25) காரை ஓட்டினாா். இந்தக் காா், திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறை அடுத்த சவலாப்பேரி விலக்கு அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்றபோது திடீரென நிலைகுலைந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் திருநீலகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தினேஷ்குமாா், அவரது உறவினா்களான திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையைச் சோ்ந்த அந்தோணிராஜ் மனைவி அந்தோணியம்மாள் (61), அவரது மகன் அந்தோணி ரவீந்தா் (30), அவரது மனைவி வான்மதி (24), மகள் ஜோஸ்ஸ்ரீமசோதா (3) ஆகிய 5 பேரும் லேசான காயமடைந்தனா். அவா்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

திருநீலகண்டன் சடலத்தை கயத்தாறு போலீஸாா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com