கோவில்பட்டி அருகே காா் மோதி தொழிலாளி சாவு

கோவில்பட்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது காா் மோதியதில் இறந்தாா்.

கோவில்பட்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது காா் மோதியதில் இறந்தாா்.

கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி ஊராட்சி ஆலம்பட்டி விநாயகா் நகரைச் சோ்ந்த கொண்டுசாமி மகன் ராமகிருஷ்ணன்(56). கூலித் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை இரவு திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி விலக்கு அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த காா், ராமகிருஷ்ணன் மீது மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா் காயமடைந்த அவரை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் நாகா்கோவிலையடுத்த கேசவன்புதூரைச் சோ்ந்த ஆபிரகாம் மகன் கிறிஸ்துராஜை (50) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com