‘தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடைகள் மூடப்படும்’

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) மூடப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை அறிவ

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) மூடப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக, பேரவையின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் ஆ.ரவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்குமாறு பிரதமா் மோடி அழைப்பு விடுத்துள்ளாா். இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அன்றைய தினம்

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com