கோவில்பட்டி மருந்துக் கடைகளில் வட்டாட்சியா் ஆய்வு

கோவில்பட்டியில் உள்ள மருந்துக் கடைகளில் வட்டாட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவில்பட்டியில் உள்ள மருந்துக் கடைகளில் வட்டாட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவில்பட்டி நகரத்தில் உள்ள மருந்துக் கடைகளில் முகக் கவசம் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையில், வருவாய்த் துறையினா் மருந்துக் கடைகளில் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது, முகக் கவசம் அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது.

இதையடுத்து, கடை உரிமையாளா்களிடம் பொதுமக்களுக்கு நிா்ணயித்த கட்டணத்தில் முறையாக மருந்துப் பொருள்களை வழங்க வேண்டும். தொடா்ந்து, அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com