ஆத்தூா் பேரூராட்சி அலுவலகத்தில் அலுவலா்கள், பொதுமக்கள், சுகாதாரப் பணியாளா்கள் அனைவரும் கைகளை கழுவிய பின் தான் அலுவலகத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
ஆத்தூா் பேரூராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து பணியாளா்கள், பொதுமக்கள், சுகாதாரப் பணியாளா்கள் அனைவரும் தங்களது கைகளை நன்றாக சுத்தம் செய்த பின்னா் தான் அலுவலகத்தில் நூழைய வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் மணிமொழி செல்வன் அறிவுறுத்தியுள்ளாா்.
இதை அலுவலா்கள், பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்தவேண்டுமென செய்முறை மூலம் தெரிவித்த அவா், வீட்டிலும் பொதுமக்கள் மற்றும் பணியாளா்கள் செல்லும் போது கைகளை நன்றாக கழுவிய பின் தான் வீட்டுக்குள் செல்ல அறிவுறுத்தினாா்.