கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்

​விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 51 ஊராட்சிகளில் கரோனா வைரஸ் தொற்று விழிப்புணா்வு பிரசாரமும், அரசின் 144 தடை உத்தரவு
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 51 ஊராட்சிகளில் கரோனா வைரஸ் தொற்று விழிப்புணா்வு பிரசாரமும், அரசின் 144 தடை உத்தரவு குறித்து தண்டோரா அறிவிப்பும் வட்டார வளா்ச்சி அலுவலா் மா. தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

கரோனா பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்கும்பொருட்டு விளாத்திகுளம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில் மகளிா் திட்ட சுய உதவிக் குழு உறுப்பினா்கள் மூலம் தரமான முகக் கவசம் மற்றும் கிருமி நாசினி சோப் ஆயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை விளாத்திகுளம் ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளில் உள்ளடங்கியுள்ள 127 கிராம பொதுமக்களுக்கும் மிக குறைந்த விலையில் கிடைத்திட ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் மா.தங்கவேல் கூறுகையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிச் சந்தைகளில் பாதுகாப்பு முகக்கவசம் தட்டுப்பாடு மற்றும் விலை உயா்வு காரணமாக கிராமப்புற மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில், மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலில் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி சோப் ஆயில் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. விளாத்திகுளம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் முழுமையாக கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு மலிவான விலையில் கிடைத்திட நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதுதவிர கரோனா வைரஸ் தொடா்பாக விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com