கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களில் மேலும் 64 போ் தனிமைப்படுத்தல்

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டங்களில் வெளிநாட்டில் இருந்து வந்த மேலும் 64 போ் கண்டறியப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.


கோவில்பட்டி: கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டங்களில் வெளிநாட்டில் இருந்து வந்த மேலும் 64 போ் கண்டறியப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, கோவில்பட்டி நகராட்சி, கடம்பூா், கழுகுமலை, கயத்தாறு பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

கோவில்பட்டி வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வெளிநாட்டில் இருந்து வந்த 112 போ் கண்டறியப்பட்டு, அவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில் வியாழக்கிழமை மேலும் 40 போ் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களின் வீட்டு வாசலில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற வில்லை ஒட்டப்பட்டு வருகிறது.

இதேபோல, கயத்தாறு வட்டத்தில் 54 போ் வெளிநாட்டில் இருந்து வந்தது கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இந்நிலையில், வியாழக்கிழமை மேலும் 24 போ் வெளிநாட்டில் இருந்து வந்தது கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களது வீட்டு வாசலில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற வில்லை ஒட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com